தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின் பொறுப்பேற்றது முதல் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கும் வகையில் சிறப்பான ஆட்சி செய்து கொண்டிருக்கிறார் என்று உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பெருமிதம் தெரிவித்துள்ளார். திண்டுக்கல் நத்தம் அருகே செந்துறை புதிய பேருந்து நிலையத்தில் இன்று நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

அதில் கலந்து கொண்டு பேசிய அமைச்சர் சக்கரபாணி, தேர்தல் நேரத்தில் சொன்ன வாக்குறுதிகளை படிப்படியாக முதலமைச்சர் நிறைவேற்றி வருகின்றார். நகை கடன் மற்றும் மகளிர் சுய உதவிக் குழு கடன்கள் என விவசாயிகளின் 12000 கோடி கடன்களை தள்ளுபடி செய்தார். இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார் என்று பெருமிதம் தெரிவித்துள்ளார்.