பிக்பாஸ் விக்ரமன் மீது சில நாட்களுக்கு முன்பாக கிருபா முனுசாமி என்ற வழக்கறிஞர் ஒருவர் விக்ரம் தன்னை காதலித்து ஜாதி ரீதியாக அசிங்கமாக பேசி இதுவரையிலும் 12 லட்சத்திற்கும் மேல் பணத்தைப் பறித்து உளவியல் ரீதியாக என்னை சிதைத்து தற்கொலை செய்து கொள்ள தூண்டினார். அவர் மீது கட்சி ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டு பரபரப்பை கிளப்பினார். அதோடு விக்ரமன் தன்னோடு மேனேஜர் என்ற ஒரு பெண்ணை அறிமுகம் செய்துவிட்டு அந்த பெண்ணுடன் தகாத உறவில் இருந்தார். இந்த விஷயம் எனக்கு கடைசியில் தான் தெரியவந்தது.

இதுபோன்று பதினைந்துக்கும் மேற்பட்ட பெண்களை ஏமாற்றி உறவில் இருந்துள்ளார் என்று கூறி விக்ரமன் பெண்களுடன் லீலை செய்த ஆதாரங்களையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில் காதலிப்பதாக கூறி பண மோசடியில் ஈடுபட்டதாக பிக்பாஸ் புகழ் & விசிக நிர்வாகி விக்ரமன் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. வழக்கறிஞர் பெண் ஒருவர் ஏற்கனவே விக்ரமன் மீது சமூக வலைதளத்தில் ஆதாரத்துடன் புகார் தெரிவித்திருந்தார். இந்நிலையில் அதே பெண் இன்று சென்னை ஆணையர் அலுவலகத்தில் விக்ரமன் மீது புகார் அளித்தார். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது