மேற்கு ஆப்பிரிக்கா நாடான கினியாவின் தலைநகர் கொனக்ரியில் அமைந்துள்ள எரிபொருள் சேமிப்பு கிடங்கில் நேற்று தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 178 பேர் படுகாயம் அடைந்த நிலையில் வெளிநாட்டினரையும் சேர்த்து 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்ததோடு காயமடைந்தவர்களை மருத்துவமனையிலும் அனுமதித்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.