சீனாவின் வடமேற்கு பகுதியான கிங்காய் மற்றும் கான்சு மாகாணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் இடிபாடுகளில் சிக்கி 116 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சிக்கி உள்ளவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் கடுமையாக சேதம் அடைந்த நிலையில் 500க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் 100 கிலோ மீட்டர் தூரத்திற்கு உணரப்பட்டதாக கூறப்படுகிறது.