தமிழகத்தில் மருத்துவ கலந்தாய்வு காண இணையவழி விண்ணப்ப பதிவு தொடங்கியுள்ளது. மாநில இட ஒதுக்கீட்டின் கொள்கையின் படி மாற்று திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், ஓய்வு பெற்ற ராணுவத்தினரின் வாரிசுகள் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மருத்துவ கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அதன்படி நிகழாண்டில் எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்களுக்கு மாற்றுத் திறனாளிகள் பிரிவின்கீழ் விண்ணப்பிப்பவர்கள் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் மண்டல மருத்துவ வாரியத்தால் வழங்கப்பட்ட தகுதி சான்றை சமர்ப்பிக்க வேண்டும். ஒருவேளை அந்த சான்றை இதுவரை பெறாதவர்கள் இணைய வழி மூலமாக விண்ணப்பிக்கலாம். ஆனால் கலந்தாய்வுக்கு முன்பாக தகுதி சான்றை பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் சிறப்பு பிரிவு ஒதுக்கீட்டுக்கு சம்பந்தப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.