எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு அதிமுகவினர் ஆங்காங்கே எம்ஜிஆர் அவர்களது புகைப்படத்திற்கும் உருவ சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் ஓ பன்னீர்செல்வம் அவர்களின் சொந்த ஊரான பெரிய குளத்தில் எம்ஜிஆர் அவர்களின் பிறந்த நாள் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் அதிமுக கொடியேற்றுவதில் இபிஎஸ் தரப்பினருக்கும் ஓபிஎஸ் தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறில் அடிதடி மோதலும் இருந்ததால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.