புதுச்சேரியில் உள்ள உணவகம் ஒன்றில் பத்து ரூபாய் நாணயம் கொடுத்தால் முட்டையுடன் சிக்கன் பிரியாணி வழங்கப்படும் என்று அதிரடி ஆஃபரை அறிவித்துள்ளனர். இது பிரியாணி பிரியர்களுக்கு மட்டுமல்லாது உணவு பிரியர்கள் அனைவருக்கும் ஆச்சர்யத்தை ஏற்படுத்திய நிலையில் ஏராளமானோர் கடை முன் திரண்டனர்.

இதனை அடுத்து நீண்ட வரிசையில் காத்திருந்து பத்து ரூபாய் நாணயத்தை கொடுத்து விட்டு பிரியாணி வாங்கி சென்றனர். பத்து ரூபாய் நாணயம் செல்லும் என விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இத்தகைய ஆஃபரை அறிவித்ததாக கடையின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.