மும்பையில் இருந்து பெங்களூருக்கு புறப்பட்ட SPICEJET நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தில் பயணி ஒருவர் கழிவறைக்கு சென்றுள்ளார் அப்போது கழிவறையின் கதவு திறக்க முடியாத படி லாக் ஆகிவிட்டது. இதனால் உள்ளே இருக்கும் பயணிக்கு உதவுவதற்காக விமானத்தில் இருந்த சக பயணிகள் முயற்சி செய்து பார்த்தனர். ஆனாலும் கதவை திறக்க முடியாமல் போய் உள்ளது.

இதனை அடுத்து விமான ஊழியர்கள் கழிவறைக்குள் இருந்த பயணிக்கு பேப்பர் ஒன்றில் தகவல் அனுப்பினர் அதில் நாங்கள் கதவை திறக்க முயற்சித்தும் முடியவில்லை. பயம் கொள்ளாமல் அமைதியாக சற்று பொறுத்திருங்கள். விமானம் தரையிறங்கியதும் கதவு திறக்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் சுமார் ஒரு மணி நேரம் 50 நிமிடங்கள் அந்த பயணி கழிவறையில் இருந்தவாறு தனது பயணத்தை முடித்துள்ளார். இந்த சம்பவத்திற்கு மன்னிப்பு கேட்ட Spicejet நிறுவனம் பயணிக்கு முழு பணத்தையும் திரும்ப கொடுப்பதாக தெரிவித்துள்ளது.