மணிப்பூரில் கடந்த வருடம் இரண்டு பிரிவினர்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் மிகப்பெரிய கலவரமாக உருமாறியது. இதில் ஏராளமானோர் உயிர் இழந்தனர். பல நாட்கள் இந்த வன்முறை சம்பவங்கள் நீடித்தது. நாடே கொந்தளிக்கும் வகையிலான அத்துமீறல்கள் மணிப்பூரில் நடந்தது.

அதன் பிறகு ராணுவம் மணிப்பூரில் குவிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் மீண்டும் மணிப்பூரில் பதட்டமான சூழல் நிலவியுள்ளது. இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் ஒரு கோவிலின் அருகே ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கையெறி குண்டுகளை வீசியும் துப்பாக்கியால் சுட்டும் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் உயிரிழந்த நிலையில் இரண்டு பேர் படுகாயம் அடைந்தனர். இதற்கு பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் கொடுக்கத் தொடங்கியதால் அப்பகுதியில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது.