தெலுங்கானா கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் அவர்களின் எக்ஸ் வலைதள பக்கம் மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கவர்னர் மாளிகை தொழில்நுட்ப பிரிவினர் எக்ஸ் வலைதள பக்கத்தை மீட்கும் முயற்சியில் இறங்கியுள்ளனர்.

எதற்காக தமிழிசை அவர்களின் எக்ஸ் வலைத்தள பக்கம் முடக்கப்பட்டது என்பது பற்றிய விவரம் எதுவும் தெரியவராத நிலையில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.