தனது சகோதரியும், அவரது கணவரும் குழந்தைகளின் கண் முன்னே இஸ்ரேலில் கொலை செய்யப்பட்டனர் என ஹிந்தி சீரியல் நடிகை மதுரா நாயக் கண்ணீர் மல்க தெரிவித்துள்ளார். இந்திய வம்சாவளி யூத பெண்ணான மதுரா இன்ஸ்ட்டா பதிவில், ‘எனது குடும்பம் சந்தித்த வேதனைகளை வார்த்தையால் சொல்ல முடியாது. இஸ்ரேல் பெரும் வேதனையில் உள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகள் தீப்பிடித்து எரிகிறது’ என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.