தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் நடிகை நயன்தார இயக்குனர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து வாடகைத் தாய் மூலம் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார். சமீபத்தில் தான் தனது குழந்தைகளுக்கு முதல் பிறந்தநாளை கொண்டாடினர். இந்நிலையில் சமூக வலைதளங்களில் பிசியாக இருக்கும் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் தற்போது நடுரோட்டில் இரவில் ரொமான்ஸ் செய்வது போன்ற புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

விக்னேஷ் சிவனின் இன்ஸ்டா பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. விக்கி, நயன்தாராவுடன் மலேசிய தெருவில், இரவு நேரத்தில் உலா வரும் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். அதில், விக்கி, அளவோடு இருக்கும் ஒருவித சிநேகிதன் ஆனேன் என்று பதிவிட்டுள்ளார். இதற்கு லைக்ஸ் மற்றும் கமெண்ட்கள் குவிந்து வருகிறது