கிருஷ்ணகிரி மாவட்டம் லாலிக்கல் பகுதியைச் சேர்ந்தவர் தேவராஜ். இவரது அண்ணன் மஞ்சுநாத். இவர்கள் இருவர் இடையே வெகு காலமாக சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இந்நிலையில் சாலமாவு என்ற பகுதியில் உள்ள தனது விளை நிலத்தை தேவராஜ் சமன் செய்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த மஞ்சுநாத் மற்றும் அவரது நண்பர்கள் தேவராஜை வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார் மஞ்சுநாத் மற்றும் அவரது நண்பர்கள் என மூன்று பேரை கைது செய்தனர்.