மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் பகுதியை சேர்ந்தவர் குபேந்திரன். இவருக்கு ஆனந்தி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணாமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர். ஆனந்தியின் மாமியார் இருளாயி, ஆனந்தி மீது மிகுந்த பாசம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது இந்நிலையில் சமீபத்தில் இருளாயி காலமாகியுள்ளார்.

பின்னர் தினமும் இருளாயி தன் கனவில் வந்து தன்னிடம் வந்துவிடு என கூறுவதாக அக்கம்பக்கத்தினரிடம் ஆனந்தி கூறிவந்துள்ளார். இந்நிலையில் திடீரென ஒரு நாள் உடல் மீது பெட்ரோல் ஊற்றி தற்கொலை செய்துகொண்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.