நடிகை சமந்தா நாகசைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன்பிறகு இவர்களுடைய திருமண வாழ்க்கையில் பிரச்சினை வந்ததால் இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தார்கள். இதனையடுத்து சமந்தா புஷ்பா படத்தில் ஊர் சொல்றியா என்ற பாடலுக்கு நடனமாடி ரசிகர்களுடைய மத்தியில் தன்னுடைய மார்க்கெட்டை ஏற்றுக் கொண்டார். சமந்தா அதுமட்டுமில்லாமல் ஹாலிவுட்டிலும் நடிக்க கமிட்டானார். இதற்கிடையில் அவர் எதிர்பாக்காத சூழலில் மயோசிட்டிஸ் நோய் தாக்கியது .

இதனால் தீவிர சிகிச்சை எடுத்துக் கொண்ட அவர் தற்போது அதிலிருந்து ஓரளவுக்கு மீண்டுள்ளார். இதனை தொடர்ந்து தற்போது இவர் விஜய் தேவரகொண்டாவோடு குஷி படத்தில் நடித்தார். இந்தநிலையில், மம்மூட்டி – ஜோதிகா நடித்த ‘காதல் தி கோர்’ படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. சற்று சர்ச்சையும் ஏற்படுத்தியது. இதற்கிடையில்  ரசிகர்களைத் தொடர்ந்து நடிகை சமந்தாவும், “இந்த ஆண்டிற்கான சிறந்த திரைப்படம். என்னால் இன்னும் மீள முடியவில்லை” என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படத்தை பாராட்டி போஸ்ட் போட்டுள்ளார்.