நடிகை த்ரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதை கண்டித்து குஷ்பூ, சிரஞ்சீவி உட்பட பலர் கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், த்ரிஷா, குஷ்பூ மற்றும் நடிகர் சிரஞ்சீவி மீது நாளை வழக்கு தொடர உள்ளதாக மன்சூர் அலிகான் தெரிவித்துள்ளார். மேலும், தான் பேசிய வீடியோவை எடிட் செய்து வேண்டுமென்றே த்ரிஷா குறித்து ஆபாசமாக பேசியதாக சித்தரித்துள்ளனர் என்று குற்றம்சாட்டிய மன்சூர் அலிகான், தான் பேசிய முழு வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.