விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வரும் நிலையில் வனிதாவின் மகள் ஜோவிகா இதில் போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார். இவருக்கு பல விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் பிக் பாஸ் வீட்டில் சாப்பிடுவது, தூங்குவது மற்றும் வலிக்கு விடுவது என்று இவர் இருந்து வருகிறார். அதேசமயம் நாட்கள் செல்லச் செல்ல மாயா மற்றும் பூர்ணிமாவுடன் இணைந்த இவர் சக போட்டியாளர்களை மரியாதை இல்லாமல் நடத்துகின்றார். மேலும் ஆறு முறை கேப்டன் ஆகும் வாய்ப்பு கிடைத்தும் அவை அனைத்திலும் இவர் தோற்று விட்டார். இவர் பிக் பாஸ் வீட்டில் அடிக்கடி வழுக்கி விழுந்து வருவதை பலரும் கேலி செய்து வருகிறார்கள்.

இது தொடர்பாக அவரது தாயாரான வனிதா பேசியுள்ளார். அதாவது தன்னுடைய மகளுக்காக மட்டும் முட்டுக் கொடுத்தவரும் வனிதா, ஜோவிகாவுக்கு அறிவே இல்லை என்றும் வீட்டிலிருந்து காருக்கு செல்வதாக இருந்தாலும் சரி ஆலம்பாக்கத்தில் உள்ள எனது அப்பா வீட்டில் இருக்கும்போதும் சரி எந்த நேரமும் ஓடிக்கொண்டே இருப்பா. அவளுக்கு ஓடுவது என்றால் மிகவும் பிடிக்கும். அவள் ஒரு ரன்னர். இதனால் பலமுறை ஓடாதே கீழே விழுந்து விடுவாய் என்று சொல்லியும் பார்த்து விட்டேன் அதை மட்டும் அவள் கேட்கவே மாட்டாள். விழுந்து நல்லா அடிபடட்டும் அப்போதான் அவளுக்கு புத்தி வரும் என்று வனிதா பேசியுள்ளார்