தமிழகத்தில் மீன்கள் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கோடை வெயிலின் தாக்கம் உச்சத்தில் இருப்பதால் அசைவ பிரியர்கள் சிக்கன் மீது நாட்டம் செலுத்தாமல் மட்டன், மீன்களை ருசிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். மட்டன் விலை ஏற்கனவே உச்சத்தில் இருக்கும் நிலையில் தற்போது மீன்கள் விலையும் உயர்ந்து வருகிறது. தமிழகத்தில் மீன்பிடித் தடைக்காலம் அமலில் இருப்பதால் மீன்களின் விலை இன்னும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில்கொண்டு, 61 நாட்களுக்கு இந்த தடை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த தடைக்காலங்களில், விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீன் விலை மேலும் அதிகரிக்கும். இதனால் அசைவ பிரியர்கள் கவலையில் உள்ளனர்.