சித்திரை திருவிழாவை முன்னிட்டு மதுரையில் 6 நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் கலெக்டர் பரிசீலிக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளையானது உத்தரவு பிறப்பித்தது. மாவட்ட பாஜக தலைவர் மகா சுசீந்திரன் தாக்கல் செய்த பொது நல மனுவில் “மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் பக்தர்கள் அதிகம் கூடுவர்.

இந்த நாட்களில் டாஸ்மாக் கடைகள் செயல்பட்டால் குற்றங்கள் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. சிரமம் இல்லாமல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வழிவகை செய்யவேண்டும். ஏப்.,30 -மே 5 வரை மதுரை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள், பார்கள், தனியார் மதுக் கடைகளை மூடக் கோரி மதுரை கலெக்டருக்கு மனு அனுப்பினோம். இதுகுறித்து பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் மகா சுசீந்திரன் குறிப்பிட்டார்.