மகாராஷ்டிரா மாநிலம் பூனாவில், குடிபோதையில் இருந்த ஒரு இளைஞர் அரசுப் பேருந்தைத் திருடி, நகரின் முக்கிய வீதிகளில் ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மாநகராட்சிப் பேருந்து நிலையத்திற்கு வந்த பேருந்தின் ஓட்டுநர், அவசரத்தில் சாவியை ஸ்டீயரிங் அருகிலேயே விட்டுவிட்டுச் சென்றுள்ளார். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அந்த 20 வயது இளைஞர், பேருந்தை எடுத்துக்கொண்டு ஜங்லி மகாராஜ் சாலையில் தாறுமாறாக ஓட்டியுள்ளார்.
#पुणे तेथे काय उणे
एका बेवड्याने पीएमपी बस पळवली. दारू पित गाडी चालवत होता. डेक्कन जेएम रोडवर त्याची गाडी अडवली. त्याला जबरदस्तीने बाहेर काढला. नशिब बसमध्ये प्रवासी नव्हते आणि कोणाला चिरडले नाही. बस कुठून चोरली याचा तपास सुरू आहे.
पीएमपीवर कोणाचेच कंट्रोल नाही.#pune#Punenews pic.twitter.com/MLTIjCzLvX— Brijmohan Patil (@brizpatil) April 25, 2026
எதிர்த் திசையில் பேருந்து வருவதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்களும் போலீசாரும் உடனடியாகச் செயல்பட்டனர். அதிர்ஷ்டவசமாகப் பேருந்திற்குள் பயணிகள் யாரும் இல்லாததாலும், போலீசார் விரைந்து செயல்பட்டு கோகலே மெமோரியல் சதுக்கம் அருகே பேருந்தை வழிமறித்ததாலும் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஓட்டுநரின் அலட்சியமே இதற்குக் காரணம் எனத் தெரியவந்துள்ள நிலையில், அவர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 2012-ல் பூனாவில் நடந்த ஒரு பேருந்து கடத்தல் சம்பவத்தின் கோர நினைவுகளை இந்த நிகழ்வு மீண்டும் கிளப்பியுள்ளது.
