நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது சிக்கல் சிங்காரவேலவர் கோவில். அம்மனின் 64 சக்தி பீடங்களில் ஒன்றாக கூறப்படும் இந்த கோவிலில் நாரதர், விசுவாமித்திரர், காத்தியாயனர் அகத்தியர் போன்றோர் வழிபாடு செய்துள்ளனர். இந்த கோவிலில் முருகன், சிவன், ஹனுமான், பெருமாள் என நான்கு பேரும் அருள் பாலிப்பது மேலும் சிறப்பு வாய்ந்தது.

இந்த ஆலயத்தில் உள்ள முருகருக்கு சத்ரு சம்ஹார திரி சதை அர்ச்சனை செய்வதன் மூலம் எதிரிகளின் தொல்லைகளில் இருந்து விடுபட்டு நன்மை நடக்கும் என்பது ஐதீகம். சிக்கல்களில் இருந்து விடுபட சிக்கல் சிங்காரவேலரை தரிசிக்க வேண்டும் என்று கூறப்படுவது வழக்கம்.