செவ்வாய்க்கிழமை முருகப்பெருமானுக்கு உரிய நாளாகும். அந்த நாளில் முருகப்பெருமானின் வேலுக்கு பாலபிஷேகம் செய்தால் அனைத்து பாவங்களும் பறந்து ஓடுவதோடு மனதில் உள்ள கவலைகளும் காணாமல் போகும் என்பது நம்பிக்கை.

அதேபோன்று வெள்ளிக்கிழமைகளில் விளக்கேற்றி, கந்தசஷ்டி கவசம் பாராயணம் செய்து, கற்கண்டு நெய்வேத்தியம் படைத்து, செந்நிற மலர்கள் சூட்டி வேலவனை வழிபடுவதால் வாழ்வில் பட்ட கஷ்டங்கள் எல்லாம் காற்றாய் பறந்தோடும். இதுவரை கிடைக்காமல் இருந்த முன்னேற்றங்கள் அனைத்தும் வரிசையாக கிடைக்கப்பெறும். முருகப்பெருமானை தொடர்ந்து வழிபடுவதன் மூலம் வீடு மனை யோகம் கிடைக்கும்.