ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனை ஆதரித்து பிப்ரவரி 24, 25 தேதிகளில் முதல்வர் பரப்புரை செய்யவுள்ளார். 24ம் தேதி வெட்டிக்காடு வலசு, நாச்சாயி டீ கடை, சம்பத் நகர் ஆகிய இடங்களிலும், 25ம் தேதி ஜெகநாதபுரம், சூரம்பட்டி நால்ரோடு, மணிக்கூண்டு உள்ளிட்ட இடங்களிலும் ஸ்டாலின் பரப்புரை செய்கிறார்.

அதேவேளையில் அதிமுக வேட்பாளரை ஆதரித்து ஈரோட்டில் இபிஎஸ் மொத்தம் 5 நாட்கள் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். மு.க.ஸ்டாலின் ஆட்சிக்கு வந்தபின் நடைபெறும் முதல் தேர்தல் என்பதால் இது அவரது ஆட்சியின் மதிப்பீடாகவே பார்க்கப்படுகிறது. அதேநேரம் இழந்த ஆட்சியை மீட்க களம் இறங்குகிறார் எடப்பாடியார்.