ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் நேற்றோடு நிறைவடைந்தது. இதில் 41 வேட்பு மனுக்கள் நிராகரிக்கப்பட்டு 80 பேருடைய வேட்புமனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இதனை தொடர்ந்து வேட்புமனு ஏற்கப்பட்ட வேட்பாளர்கள் தங்களுடைய பிரச்சாரத்தை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பிப்ரவரி 24ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளார்.

இந்நிலையில், பிப்ரவரி 19,20 ஆகிய இரண்டு நாட்கள் இவிகேஎஸ் இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தலில் செங்கலை கையிலெடுத்தவர், இந்த முறை என்ன யுக்தியை கையிலெடுக்க போகிறார் அனைவரும் ஆர்வமுடன் காத்திருக்கின்றனர்.