பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியில் இருந்தும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்தும் விலகுவதாக அதிமுக நேற்று அறிவித்தது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, அதிமுக விலக்கியதில் எங்களுக்கு எந்தவித நஷ்டமும் கிடையாது என்று தெரிவித்துள்ளார். மேலும் அதிமுக ஆட்சியை தக்க வைத்து அந்த கட்சியை ஒருங்கிணைத்ததே பாஜக தான். எடப்பாடி நன்றி மறந்து விட்டார். ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ்ஸுக்கு இடையே சண்டை வராமல் பார்த்துக் கொள்வதே எங்களுக்கு வேலையாக இருந்தது. இனி அந்த கவலை எங்களுக்கு இல்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.