அதிமுக கட்சி அலுவலகத்தில்  நேற்று  நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பாஜகவுடன் கூட்டணியை முறித்துக் கொள்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது அரசியலில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில்,  நேற்று  செய்தியாளர்களை சந்தித்த சி.ஆர்.சரஸ்வதி (அமமுக), “எடப்பாடி பழனிசாமி தன்னை புரட்சித் தலைவி அம்மாவாகவே நினைத்துக் கொண்டிருக்கிறார்.

எடப்பாடி பழனிசாமி யாருக்குமே விசுவாசமாக இருக்க மாட்டார் என்பதற்கு இதுவும் ஒரு சாட்சி. தேவை என்றால் காலில் விழுவார், இல்லையென்றால் தூக்கி எறிவார் என்பதுதான் எடப்பாடி பழனிசாமியின் குணம் என்பது பாஜகவுக்கு இன்று புரிந்திருக்கும்” என தெரிவித்துள்ளார்.