தற்போது நாடு முழுவதும் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. முன்பு எப்போதும் போல் இல்லாத அளவிற்கு இந்தியாவில் வெப்பநிலை மிகவும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இந்நிலையில் நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை பதிவான நகரங்களில் சேலம் மாவட்டம் 108.14 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்ப நிலையுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.

ஆந்திராவின் ராயலசீமாவில் 110.3 டிகிரி பெற்று முதலிடத்தையும், ஒடிசா மாநிலம் 109.04 டிகிரி வெப்பநிலையுடன் இரண்டாவது இடத்தையும் பிடித்திருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.