தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்பட உள்ளது. இந்த முறை இதில் கூடுதல் பயனாளிகள் சேர்க்கப்பட உள்ளதாக புதிய தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் கடந்த ஜனவரி மாதம் மேலும் சில பயனாளிகளுக்கு பணம் வழங்கப்பட்டு வருகிறது. இப்போது 1.7 கோடி பேருக்கு இந்த பணம் வழங்கப்பட்டு வரும் நிலையில் தேர்தலுக்குப் பிறகு மேலும் சிலருக்கு இந்த திட்டத்தில் பணம் வழங்கப்பட உள்ளது. தேர்தலுக்குப் பிறகு புதிதாக விண்ணப்பங்கள் ஏற்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.