தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே அரசுத்துறை அதிகாரிகள் பலரும் தொடர்ந்து இடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். தற்போது சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக ஆவடி ஆணையர் அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஏடிஜிபி டேவிட்சன் தேவாசிர்வாதம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார் .

அவருக்கு பதிலாக உளவுத்துறை புதிய ஏடிஜிபி பொறுப்பை கூடுதலாக செந்தில் வேலன் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி சங்கர் ஆவடி காவல் ஆணையராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும் உளவுத்துறை ஐஜி செந்தில்வேலன் உளவுத்துறையின் முழு பொறுப்பையும் ஏற்றுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.