கேரள மாநிலத்தைச் சேர்ந்த பாலக்காட்டில் முதுகு தண்டுவட தசை செயலிழப்பு நோயால் 16 மாத ஆண் குழந்தை நிர்வான் அவதிப்பட்டு வந்துள்ளான். இதன் காரணமாக தங்கள் 16 மாத ஆண் குழந்தையின் சிகிச்சைக்கு “க்ரவுட் ஃபண்டிங்” முறையில் பெற்றோர்கள் நிதி திரட்டி வந்தனர்.

இந்நிலையில் பெயர் தெரியாத ஒரு நபர் ரூபாய்.11 கோடி ரூபாய் கொடுத்து அவர்களுக்கு உதவி செய்துள்ளார். இவ்வாறு முதுகு தண்டுவட தசை செயலிழப்பு நோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் குழந்தையை காப்பாற்ற முகம் தெரியாத நபர் 11 கோடி ரூபாய் கொடுத்த சம்பவம் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.