தமிழகத்தில் பொது மக்களுக்காக உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற புதிய திட்டத்தை அரசு அறிமுகம் செய்துள்ளது. இது களத்தில் முதல்வர் திட்டத்தின் அடுத்த கட்டம் என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் ஒவ்வொரு மாதமும் ஒரு நாள் வட்டம் அளவில் தங்கி கள ஆய்வில் ஈடுபட்டு மக்கள் குறைகளை கேட்டறிந்து களத்திலே தீர்வு காண்பார்கள் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.