கிராமப்புற மாணவர்களை ஊக்குவிக்கும் ஊராக திறனாய்வு தேர்வுக்கு நவம்பர் 24ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் பங்கேற்கும் இந்த தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் என நான்கு ஆண்டுக்கு உதவி தொகை வழங்கப்படும். இந்த ஆண்டுக்கான தேர்வு டிசம்பர் 16ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் தகுதியான மாணவர்கள் தலைமை ஆசிரியரை அணுகி விண்ணப்பிக்கலாம் என்று தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.