நீலகிரி மாவட்டத்திற்கு யாரும் இப்போதைக்கு வர வேண்டாம் என்று அம்மாவட்ட ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். நேற்று ஒரே நாளில் கீழ் கோத்தகிரியில் 24 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதனால் கல்லாறு உள்ளிட்ட ஆறு மற்றும் கால்வாய்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. ஆங்காங்கே நிலச்சரிப்பு போன்றவை ஏற்படுவதால் இந்த நிலை சரியாகும் வரை நீலகிரிக்கு யாரும் வர வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.