பான்கார்டை ஆதாருடன் இணைக்க நினைத்தால் உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இல்லை என்பதை உறுதிசெய்துகொள்ளுங்கள். ஒரு நபருக்கு ஒரு பான் கார்டு மட்டும்தான் இருக்கவேண்டும். உங்களிடம் ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகள் இருப்பின், இந்த தவறை உரிய நேரத்தில் சரிசெய்து டூப்ளிகேட் பான் கார்டை திரும்பியளித்து விடுங்கள்.

ஏனென்றால் இது வருமான வரித்துறைக்கு தெரியவந்தால், நீங்கள் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கலாம். வருமான வரித்துறையின் விதிகளின் படி ஒருவர் 2 பான் கார்டுகளை வைத்திருந்தால் அவருக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படலாம் (அ) குறைந்தபட்சம் 6 மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்கவேண்டி வரலாம். அதே நேரம் தண்டனை மற்றும் அபராதம் இரண்டுமே விதிக்கப்படலாம்.