ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தி.மு.க கூட்டணி காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ் இளங்கோவன், தே.மு.தி.க சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அ.தி.மு.க சார்பில் கே.எஸ்.தென்னரசு உட்பட 62 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி முதல்வர் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வார் என திமுக அறிவித்துள்ளது. அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 19-ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்வார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்… பிப்ரவரி 24-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம்… தி.மு.க அறிவிப்பு…!!!!
Related Posts
கல்லூரி மாணவர்களுக்கு இலவசக் கல்வித் திட்டம்…. விண்ணப்பிப்பது எப்படி…??
ஏழை மாணவர்கள் இலவசமாக இளங்கலை பயிலச் சென்னைப் பல்கலையில் 2010 முதல் இலவசக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆதரவற்ற, மாற்றுத்திறனாளி, மூன்றாம் பாலின மாணவர்களுக்கு இதில் முன்னுரிமை அளிக்கப்படுகிறது. ஆண்டுக் குடும்ப வருமானம் ₹3 லட்சத்திற்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள்,…
Read moreபாலியல் வழக்கு…. காதல் மன்னன் காசியின் நண்பர் சிக்கினார்….!!!
நாகர்கோவிலை சேர்ந்த காசி பல பெண்களை வலையில் வீழ்த்தி வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 2020ல் கைது செய்யப்பட்டார். அவர் மீது 7 வழக்குகள் பதிவான நிலையில் சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இவ்வழக்கில் சம்மந்தப்பட்ட காசியின் நண்பர் ராஜேஷ்…
Read more