ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 27-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் தி.மு.க கூட்டணி காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ் இளங்கோவன், தே.மு.தி.க சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா, அ.தி.மு.க சார்பில் கே.எஸ்.தென்னரசு உட்பட 62 பேர் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர். வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை இன்று நடைபெறுகிறது. இந்த தேர்தலை முன்னிட்டு கட்சிகள் தொகுதியில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ள நிலையில் தற்போது காங்கிரஸ் வேட்பாளர் இ.வி.கே.எஸ் இளங்கோவனை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கிறார். வருகிற பிப்ரவரி 24-ஆம் தேதி முதல்வர் ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொள்வார் என திமுக அறிவித்துள்ளது. அதேபோல் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகிற 19-ஆம் தேதி பிரச்சாரம் மேற்கொள்வார்  எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.