அமராவதி அணையில் இருந்து தொடர்ந்து நீர் திறந்து விட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து மாநில அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டுள்ளதாவது, வருகிற பிப்ரவரி எட்டாம் தேதி வரை கரூர், திருப்பூர் மாவட்டங்களில் பாசனங்களுக்காக அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட உத்திரவிடப்பட்டிருந்தது. இந்நிலையில் சம்பா சாகுபடிக்காக வருகிற 28-ஆம் தேதி வரை நீர் திறப்புக்கான காலம் நீட்டிப்பு செய்யப்படுகிறது. இதன் காரணமாக கரூர், திருப்பூர் மாவட்டங்களில் உள்ள 47 ஆயிரத்து 117 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.