சென்னை காரப்பாக்கம் அருகே அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று அமைந்துள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள கழிவு தொட்டியை சுத்தம் செய்யும் பணியில் செந்தில்குமார் என்பவர் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் விஷவாயு தாக்கியதில் அவர் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நாடாளுமன்ற பட்ஜெட் துறையில் கழிவுத்தொட்டியை சுத்தம் செய்யும் பணிகளில் இனி நூறு சதவீதம் இயந்திரம் மட்டுமே பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறிய ஒரே வாரத்தில் ஒருவர் பலியான சம்பவம் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.