ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 27-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. இதில் திமுக கூட்டணியில் காங்., சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன், அதிமுக சார்பில் கே.எஸ்.தென்னரசு, தேமுதிக சார்பில் எஸ்.ஆனந்த், நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தலில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட 121 மனுக்களில் 83 மனுக்கள் ஏற்கப்பட்டன. இன்று வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசி நாளாகும்.