தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வானவியல் மன்றம், இலக்கிய மன்றம்,சிரா திரைப்படம் மற்றும் வினாடி வினா மன்றம் உள்ளிட்ட செயல்பாடுகளில் போட்டிகள் நடத்துவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வருகின்ற பிப்ரவரி 13ஆம் தேதி முதல் பள்ளி, வட்டாரம் மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு போட்டிகள் நடைபெற உள்ளது. மாவட்ட அளவில் வெற்றி பெறும் மாணவர்கள் மாநில அளவில் மற்றும் கருத்தரங்கில் கலந்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படும்.

அது மட்டுமல்லாமல் மாநில போட்டிகளில் வெற்றி பெற்றால் மாணவர்களுக்கு வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா செல்ல வாய்ப்பு வழங்கப்படும். அரசு பள்ளிகளில் ஆறு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் விதமாக எந்த ஒரு பள்ளியும் விடுபடாமல் போட்டிகளை நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அனைத்து பள்ளிகளுக்கும் தமிழக பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.