தெலுங்கானாவில் காங்கிரஸ் உடன் கூட்டணி தொடரும் என்று திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தெலுங்கானாவில் உள்ள அனைத்து திமுக அமைப்புகளும் காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு பாடுபடுமாறும் தேர்தல் பணி குழு அமைத்து காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் எனவும் திமுக தலைமை வேண்டுகோள் விடுத்துள்ளது. வருகின்ற நவம்பர் 30ஆம் தேதி அன்று சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திமுக தலைமை இவ்வாறு அறிவித்துள்ளது.