சங்கர நேத்ராலயா மருத்துவமனை நிறுவனரான பிரபல கண் மருத்துவர் எஸ் எஸ் பத்ரிநாத் சென்னையில் இன்று காலமானார். 83 வயதாகும் இவர் 1978 ஆம் ஆண்டு தொடங்கிய சங்கர நேத்ராலயா இந்தியாவிலேயே மிகப்பெரிய மருத்துவமனையாக உள்ளது. பத்மபூஷன், பத்மஸ்ரீ மற்றும் மருத்துவத்துறைக்கான பிசி.ராய் விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளை பத்ரிநாத் பெற்றுள்ளார். அவரது மறைவுக்கு அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.