அதிமுக எம்எல்ஏக்கள் 40 பேர் திமுகவில் இணைய தூது விட்டதாக சபாநாயகர் அப்பாவு கூறியது தமிழக அரசியலில் பரபரப்பு கிளப்பியுள்ளது. தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிமுகவில் பிளவு பட்டத்துடன் டிடிவி தினகரனும் சிறைச்சென்றதை குறிப்பிட்டு அப்பாவு அப்போது, அதிமுக எம்எல்ஏக்கள் 40 பேர் திமுகவில் இணைய வந்ததை ஸ்டாலின் ஏற்கவில்லை என்று கூறினார். மேலும் மக்கள் தேர்ந்தெடுத்தால் மட்டுமே ஆட்சியில் அமர வேண்டியது என ஸ்டாலின் உறுதிப்படக் கூறியதாகவும் அப்பாவு தெரிவித்துள்ளார்.