தமிழகத்தில் நில அளவை பணிக்கான விண்ணப்பத்தை இனி இணையதளம் மூலமாக மேற்கொள்ளும் புதிய சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். நில உரிமையாளர்கள் தங்களுடைய நிலங்களை அளவீடு செய்வதற்கு சம்பந்தப்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டிய நிலை இருந்த நிலையில் தற்போது பொதுமக்களின் வசதிக்காக எந்த நேரத்திலும் எந்த இடத்தில் இருந்தும் நில அளவை செய்ய விண்ணப்பிக்கும் புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளது.

இணைய வழியில் விண்ணப்பிக்க புதிய இணையதள சேவையை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலமாக பொதுமக்கள் நில அளவை செய்ய வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு இனி நேரில் செல்ல வேண்டாம். நில அளவை காண கட்டணம் உட்பட பல்வேறு வகை கட்டணங்களை செலுத்தவும் வங்கிகளுக்கு நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. அனைத்து வேலைகளையும் இணைய வழியில் முடிப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.