தமிழகத்தில் வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக மாவட்டம் தோறும் அரசு சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் ஏராளமான இளைஞர்கள் பயனடைந்து வருகிறார்கள். அதன்படி நாகை மாவட்டத்தில் ஜனவரி எட்டாம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு தொழிற்பயிற்சி நிலைய வளாகத்தில் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை இந்த முகாம் நடைபெற உள்ளதாகவும் இதில் ஐடிஐ பயிற்சி பெற்ற இளைஞர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முகாமில் கலந்து கொள்ள வருவோர் தங்களுடைய சுயவிவர குறிப்பு, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் மற்றும் கல்வித் தகுதி சான்றிதழ்களை எடுத்து வர வேண்டும். இந்த முகாம் தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய 04365-25012 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம்.