படித்துவிட்டு வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கும் விதமாக அந்தந்த மாவட்டங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு ஏராளமானவர்கள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில்  இன்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள நியூ காலேஜ் வளாகத்தில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

இந்த முகாமில் ஐடி, உணவகம், மருத்துவமனை உள்ளிட்ட 128க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் பங்கேற்க இருக்கிறார்கள். இந்நிறுவனங்கள் வாயிலாக சுமார் நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட உள்ளது. இந்த முகாமானது காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. இதில் பங்கேற்க விரும்புவர்கள் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது