தமிழகத்தில் மாற்றுத்திறனாளி மாணவ மாணவிகளுக்கான கல்வி உதவி தொகை இரண்டு மடங்காக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 2000 ரூபாயாகவும், ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை 3000 ரூபாயிலிருந்து 6000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.

அதனைப் போலவே 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நான்காயிரம் ரூபாயில் இருந்து 8000 ரூபாயாகவும், இளநிலை பட்டப்படிப்பு மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 6000 ரூபாயில் இருந்து 12000 ரூபாயாகவும், முதுநிலை பட்டம் மற்றும் தொழிற்கல்வி பயில்வோருக்கு 7000 ரூபாயிலிருந்து 14,000 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.