சென்னையில் இன்று  பள்ளிகள் செயல்படும் என்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கனமழை காரணமாக சென்னையில் செயல்பட்டு வரும் அனைத்து வகை பள்ளிகளுக்கும் கடந்த ஜூன் 19ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் ஜூலை 22 ஆம் தேதி அதாவது இன்று  சனிக்கிழமை சென்னை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து வகை உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் ஆறு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு திங்கட்கிழமை பாடவேலையை பின்பற்றி முழு பணி நாளாக செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.