கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சென்னையில் இன்று மாபெரும் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது.

டாக்டர் கலைஞர் கருணாநிதி அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாநிலம் முழுவதும் 100 இடங்களில் தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தி தர தமிழ்நாடு அரசு முடிவு செய்திருந்தது. இந்நிலையில் அதன் ஒரு பகுதியாக இன்று சென்னையில் மாநில கல்லூரியில் காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை தனியார் துறை சார்ந்த வேலை வாய்ப்பு முகாம் நடத்தப்பட இருக்கிறது. இதில்,

கலந்து கொள்வதற்கு அனுமதி முற்றிலும் இலவசம். மேலும் முகாமில் சுமார் 300க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் மூலம் சுமார் 30000 காலி பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன. இதற்கான கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை, ஏதேனும் ஓர் பட்டப்படிப்பு, ஐடிஐ அல்லது ஏதேனும் தொழிற்பயிற்சி,  பொறியியல் என அனைத்து விதமான படிப்புகளுக்கும் வாய்ப்புகள் இருப்பதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருப்பம் உள்ள நபர்கள் www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்து ,வேலைவாய்ப்பு முகாமில் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதேபோல, வேலை வாய்ப்பு தேடி செல்பவர்கள் மட்டுமல்லாமல், தொழில் செய்ய விரும்புவோருக்கும் ஆலோசனைகள் வழங்கவும், தொழில் மேற்கொள்ள தேவையான கடன் வசதிக்காக வங்கிகளை எப்படி அணுகுவது என்பது குறித்தும் பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது. மேலும் விவரங்களுக்கு 044-20501032 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு தகவலை பெறலாம்.