தமிழகத்தில் இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜிநியமிக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகின்றது. சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கைக்கு ஆளான அமைச்சர் செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக தமிழக அரசு நியமித்தது.

இதற்கு எதிராக அதிமுக சார்பில் முன்னாள் எம்பி ஜெயவர்த்தனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வருகின்றது. இதனிடையே இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்ட நிலையில் காவேரி மருத்துவமனையில் செந்தில் பாலாஜிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.