தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பிறகும் அது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்படாமல் இருந்த நிலையில் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத் தொடரில் செப்டம்பர் மாதம் முதல் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்குவது குறித்து முதல்வர் ஸ்டாலின் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்துகின்றார். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அடுத்த மாதம் முதல் ரேஷன் கடைகள் மூலமாக உரிமை தொகையை வழங்கலாமா அல்லது வங்கி கணக்கில் செலுத்தலாமா உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்த முக்கிய முடிவு எடுக்கப்படுகிறது. இது குறித்து இன்று அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.